Monday, March 14, 2011

1 2 3 செத்துபோக ரெடியா?: பேரழிவும், லாபமும்!


1979-ல் அமெரிக்கா வின் ‘த்ரிமைல் ஐலேண்ட்’ என்ற ‘மூன்று மைல் தீவில்’ அணு உலை வெடித்துச் சித றியது.

அதற்குப் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 1986-ல் சோவியத் ஒன்றியத்தில் உக்ரைனின் செர்னோபில் எனும் இடத்தில் அணு உலை விபத்து ஏற்பட்டது. இந்த இரண்டும் ஏற்படுத்திய பாதிப்புகள், உலக நிகழ்வுகளின் வேகத்தில் மறக்கடிக் கப்பட்டிருந்த சூழலில் இவற்றை விட மிகக் கடுமையான பயங்கரத்தை ஜப்பான் எதிர்கொண்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரில் அமெ ரிக்கா வீசிய அணுகுண்டுகளால் மனித குலம் சந்தித்திராத பேரழிவை ஜப்பான் சந்தித்தது. ஹிரோஷிமாவும், நாகசாகியும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழிந்து போயின. அதற்குப் பிறகு இந்த உலகில் அணுசக்தியின் ஆபத்தை பற்றி மிக அதி கமாக பிரச்சாரம் செய்த நாடு ஒன்று இருக் கிறது என்றால் அது ஜப்பான்தான்.

இன்றைக்கு உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஜப்பானிய பெருமுதலாளிகளின் மூலதனம் மேலும் மேலும் லாபத்தை நோக்கிச் செல்லும் பய ணத்தில், அணுசக்தியால் தனது சொந்த மக்களுக்கு நேர்ந்த கதியை மறந்து, நாடு முழுவதும் மின்சார உற்பத்தியை மேம் படுத்துகிறோம் என்ற பெயரில், மேற்கத் திய பன்னாட்டு பெரும் நிறுவனங்க ளோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு எண் ணற்ற அணு உலைகளை நிறுவியது.

தீவு நாடான ஜப்பானின் கடலோரப் பகுதி முழுவதிலும் இன்றைக்கு 17 அணு மின் நிலையங்கள் இருக்கின்றன. மேலும் 13 அணுமின் நிலையங்களின் கட்டு மானப் பணி நடந்து கொண்டிருக்கிறது. இவற்றில் தற்போது இயங்கிக் கொண் டுள்ள அணுமின் நிலையங்களில் மொத் தம் 55 அணு உலைகள் செயல்படுகின்றன.

கடலோரப் பகுதி முழுவதிலும் அணு உலைகள் நிறைந்திருக்கும் இந்த நாட்டில், அணுசக்தி மூலம் தயாரிக்கப்படும் மின் சாரத்தின் மொத்த அளவு 20 சதவீதம் மட்டுமே.

ஜப்பான் கிழக்கு கடலோரப் பகுதிகள் அனைத்தையும் தாக்கி அழித்த ஆழிப் பேர லைகளிடம் அணு உலைகளும் சிக்கின.

தலைநகர் டோக்கியோவின் ஒட்டு மொத்த மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்கிற புகுஷிமா அணுமின் நிலையங் கள், சுனாமிப் பேரலைகளால் தாக்கப் பட்டு, அதன் தொடர் விளைவாக புகு ஷிமா டெய்ச்சி அணுமின் நிலையத்தின் முதல் இரண்டு அணு உலைகள் வெடித் துள்ளன.

உண்மையில் அணு உலைகளுக்குள் என்ன நடந்தது. தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் அறியார். ஆனால், அணு உலைகள் வெடித்துச் சிதறிவிட்டன என்பது மட்டும் உண்மை.

வெடித்தது அணு உலை அல்ல; அதைச் சுற்றி கட்டப்பட்ட கான்கிரீட் கட் டிடம் மட்டுமே என்று ஜப்பான் அரசு அதி காரிகள், மழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அணு கதிர்வீச்சு அபாயத்தை அவர்கள் மறுக்கவில்லை. வெடித்துச் சிதறிய அணு உலையிலிருந்து 20 கிலோ மீட் டர் சுற்றளவை தாண்டியிருக்கும் மக்கள், குழாயில் தண் ணீர் வந்தால் குடிக்கக் கூடாது; வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது; உடல் முழுவதையும் மூடிக் கொள்ள வேண் டும்; அந்தத் துணியை குளிர்வித்துக் கொண்டேயிருந் தால் நல்லது என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், தப்பித்துக் கொள்ளுங்கள் அல்லது சாவை தழுவிக் கொள்ளுங்கள் என்று பொருள்.

இந்தப் பயங்கர பின்னணியில் ஒரு உண்மை அம் பலமாகிறது. அணு உலை வெடித்துச் சிதறியுள்ள புகு ஷிமா அணுமின் நிலையம் முற்றிலும் தனியாருக்கு சொந்தமானது. இந்த நிலையம் மட்டுமல்ல, ஜப்பானிலி ருக்கும் எந்த அணு உலையும் அரசுக்கு சொந்தமானது இல்லை. வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கும் புகுஷிமா டெய்ச்சி அணுமின் நிலையத்தில் 6 உலைகள் உள்ளன; அதற்கு அருகில் உள்ள புகுஷிமா டெய்னி அணுமின் நிலையத்தில் 4 உலைகள் உள்ளன. இவை இரண்டுமே டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ)க்கு சொந்தமானவை. உலக அளவில் மிகப் பெரிய அணு மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று டெப்கோ.

அணு உலைகளைக் கையாளுவதில், குறிப்பாக நில நடுக்கம், சுனாமி ஆபத்துகள் அதிகமாக உள்ள ஜப்பா னின் கிழக்கு கடலோரப் பகுதியில் இத்தகைய அணு உலை களை பராமரிப்பதில் உள்ள ஆபத்துகள் பற்றி டெப்கோ நிறுவனம் இதுவரையிலும் எந்த அக்கறையும் காட்ட வில்லை என்பது தெரியவந்துள்ளது. 2002ம் ஆண்டில், அணு உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என்பதை இந்த நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட் டவரே வெளி உலகிற்கு அம்பலப்படுத்தினார். இதன் காரணமாகவே இவரும், இதர நான்கு முக்கிய நிர்வாகி களும் ராஜினாமா செய்தார்கள். இதேபோன்ற சம்பவம் 2006லும், 2007லும் நடந்தது.

தற்போது உயிரைக் காத்துக் கொள்ள ஜப்பானியர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பானில் இருப்பதை போலவே இந்தியக் கடலோ ரம் முழுவதிலும் தனியார் பெரும் நிறுவனங்களின் அணு உலைகளை, மின் உற்பத்தி நிலையங்கள் என்ற பெயரில் உருவாக்கி லாபம் சம்பாதிப்பதற்கான அடிப்படை ஏற்பாடே இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாடு.

பேரழிவை டி.வி.க்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய மக்கள் தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் இது

2 comments:

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_14.html நடிகர்கள் - சாதி சங்கங்கள் வழியாக சட்டமன்ற புரட்சி

thamizhavel nalapathy said...

மனித அறிவு எவ்வளவு விழிப்பற்றதாக உள்ளது என்பதற்குச் சான்று ஜப்பானில் இயற்கையாலும் மனித அறிவின் கடைகெட்ட தன்மையாகிய நவீன அறிவியலும் உயர் தொழில் நுட்பத்தாலும் வந்திருக்கும் இந்த அழிவு.

எல்லோரும் பெருமையாய் மனித அறவுக்கு உதாரணம் சொன்ன ஜப்பானியர் தங்கள் வசதிகளுக்காக வாழ்வைத் தொலைத்து நிற்பதைப் பாருங்கள்.

இனி மேலாவது மனிதன் தன் பெருமையால் அழியாமல் இயற்கையோடியந்த எளிய வாழ்வை கற்றுக கொள்ள வேண்டும்.