Sunday, May 29, 2011

இந்திய பொருளாதார அடியாளின் உருப்படாத யோசனை!


கடந்த சில ஆண்டுகளாக அத்தியாவ சியப் பொருட்களின் விலை தொடர்ச்சி யாக உயர்வது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த உடன் 100 நாட்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்திவிடுவோம் என்று அறிக்கை வெளியிட்ட பிரதமர் மன்மோகன் சிங் சமீப காலங்களில் விலைவாசி உயர்வு குறித்து கருத்தே கூறாமல் தவிர்க்கிறார்.

மறு புறம் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்ச்சியாக எகிறும் பெட்ரோல் விலை உயர்வுக்கும் மத்திய அரசு காரணம் இல்லை என்று புதிய விளக்கம் தந்து வருகிறார். வேளாண் மற்றும் நிதி அமைச்சக துறைகள் நாள்தோறும் உணவுப் பண வீக்கம் குறைந்து வருகிறது என்று புதிய புள்ளி விபரங்களை உற்பத்தி செய்து வரு கின்றன.

தற்போது பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆலோசனை தந்துள்ள பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த சில்லரை வணிகத்தில் பன்னாட்டு தொழில் நிறு வனங்களை அனுமதிக்க வேண்டும் என்று தனது பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு புறம் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயக் குடும்பங்கள் தொடர் நஷ்டம் காரணமாக விவசாயத்தை விட்டே வெளியேறும் நிலை; மறுபுறம் பல லட்சம் விவசாயிகள் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் நடைமுறைச் சூழலில் இந்தியா வின் மிக முக்கிய துறையாக அதிகளவு வேலை வாய்ப்புகளை குறைந்த முதலீட்டில் உருவாக்கும் சில்லரை வணிகம் விளங்கி வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கி றோம் என்னும் மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகள் பல கோடி இந்திய மக்களை இந்திய வணிகச் சந்தைகளில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கும் மறை முக பொருளாதார நடவடிக்கையாகும். இவ்வாறு அனுமதிப்பதன் வாயிலாக சில்லரை சந்தைகளில் போட்டிகள் ஏற்படுத் தப்பட்டு பொருட்களின் விலை குறையும் என்ற நிலை காரணமாக இந்திய வணிகச் சந்தைகளில் பல பெரிய பன்னாட்டு பெரு முதலாளிகள், நிறுவனங்கள் தங்களின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பலத் தைக் கொண்டு பல லட்சம் ஏழை மற்றும் நடுத்தர வணிகர்களை அப்புறப்படுத்தி விட்டு, பின்னர் இந்தியச் சந்தையை பத்து முதல் பதினைந்து பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றும் போது, குறுகிய காலத்தில் விலைவாசி உயரவே வழி செய்யும்.

இந்திய விவசாயிகள், நுகர்வோருக்கு இத னால் எந்த விதமான பொருளாதார நன் மைகளும் ஏற்படாது. மாறாக விலைவாசி உயர்வை மையமாகக் கொண்டு முதலாளித்துவ அமைப்புகள் தங்களின் வணிகத்தை விரிவாக்கம் செய்வது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார நலன்களுக்கு எதிராகவே அமையும். விலைவாசி உயர்வை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதே பொருளாதார உண்மை.


தி. ராஜ் பிரவீன்

1 comment:

Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News