Monday, May 23, 2011

ஐ.எம்.எப்.: கொள்லைக்கார கூட்டத்திற்கு தலைவர் யார்?


முதலாளித்துவ அமைப்பு முறையை மேலும் உறுதியாக கட்டுவதற்காக உருவாக்கப் பட்ட பன்னாட்டு நிதிநிறுவனம் (ஐஎம்எப்) யாரு டைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டும் என்பது குறித்து தற்போது உலக அளவில் பெரும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

ஐஎம்எப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் என்பவர், நியூயார்க் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கி யிருந்தபோது 32 வயது பெண் ஊழியர் ஒரு வரை பாலியல் வன்முறைக்குள்ளாக்க முயற் சித்தது அம்பலமானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். பிரான்சின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு இவர் போட்டி யிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஸ்ட்ராஸ்-கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பன்னாட்டு நிதிநிறுவனத்தின் தலை வர் பதவி காலியாகக் கிடக்கிறது. இந்த பதவிக்கு யார் வருவது என்பதே தற்போதைய போட்டி.

1944ம் ஆண்டு ஐஎம்எப் உருவாக்கப்பட் டது முதல் தற்போது வரை ஐரோப்பிய நாட் டைச் சேர்ந்த ஒருவர்தான் தலைவராக இருந்து வருகிறார். இதன் சகோதர நிறுவனமான உலக வங்கியை, அது துவங்கியது முதல் அமெரிக் காவைச் சேர்ந்த ஒருவரே தலைவராக இருந்து நிர்வகித்துவருகிறார். இந்த “பாரம்பரியத்தை” மாற்றக்கூடாது என்று ஐரோப்பிய பணக்கார நாடுகள் கூக்குரல் எழுப்பியுள்ளன. தங்களது நிதியமைச்சர் கிறிஸ்டின் லகார்டேயை ஐஎம்எப் தலைவராக்க வேண்டுமென பிரான்ஸ் கூறுகிறது. பிரான்சின் கருத்தை ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லும் ஆதரித்துள்ளார்.

துணை இயக்குநராக ஏற்கெனவே அமெரிக் காவைச் சேர்ந்த ஜான் லிப்ஸ்கி பதவியில் உள் ளார். அவரை தற்காலிக இயக்குநராக்கி விட்டு, அமெரிக்க கருவூலத்துறை மூத்த அதிகாரி டேவிட் லிப்டனை ஐஎம்எப் துணை நிர்வாக இயக்குநராக்கிவிடலாம் என்று அமெரிக்கா கணக்குப் போடுகிறது.

நிர்வாக இயக்குநர், துணை நிர்வாக இயக்கு நர் என இரண்டு முக்கியப் பதவிகளையும் நாங் களே பகிர்ந்துகொள்கிறோம் என்று ஐரோப்பா வும் அமெரிக்காவும் கூறுகின்றன. அதற்கான தீவிர முயற்சிகளிலும் ஈடுபடுகின்றன.

ஆனால், உலகின் கீழ்த்திசையிலிருந்தும், தென்திசையிலிருந்தும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. உலகப் பொருளாதாரத்தை தீர் மானிப்பதில் இனியும் அமெரிக்காவும் ஐரோப் பாவும் மட்டுமே முற்றிலும் கோலோச்சுகிற ஐஎம்எப்-க்கு இடமில்லை என்று குரல் எழுந் துள்ளது. சீனா, இந்தியா, பிரேசில், தென்னாப் பிரிக்கா ஆகிய வளர்முக நாடுகள், பன்னாட்டு நிதிநிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றங்களை இப்போதேனும் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

ஐஎம்எப் இயக்குநர் பதவி என்பது வெறும் பதவி அல்ல; இந்தப் பதவியைக் கைப்பற்ற ஐரோப்பாவும், அமெரிக்காவும் தீவிரமாக இருப்பதில் வெறும் “பாரம்பரிய” காரணங்கள் மட்டுமில்லை. மாறாக, மிகக் கடுமையான, ஆழ மான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள தங்களது பொருளாதாரத்தை மீட்க முன்னெப்போதையும் விட இன்னும் தீவிரமாக வளர்முக நாடுகளை ஒட்டச் சுரண்டுவதற்குரிய கொள்கைகளை வரையறுத்து, ஐஎம்எப் மூலமாகவும், உலக வங்கியின் மூலமாகவும் செயல்படுத்த வேண் டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன அமெரிக்க முத லாளித்துவமும், ஐரோப்பிய முதலாளித்துவ மும்!

2025ம் ஆண்டு வரை உலகப்பொருளாதார வளர்ச்சி நிலவரம் எப்படியிருக்கும் என்பது தொடர்பாக உலக வங்கி ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதன்படி அடுத்த 15 ஆண்டு காலத்தில் உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவை மையமாகக் கொண்ட உலகப்பொருளாதாரம், பன்முகத் தன்மை கொண்ட - பல துருவ பொருளாதார மாக வேகமாக மாறிவருகிறது. பொருளாதார வளர்ச்சி என்பதில் 2010ம் ஆண்டுவரை உலகம் எட்டிய வளர்ச்சி விகிதத்தைவிட, அடுத்த 15 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறையும் அபாயம் இருக்கிறது. அத்தகைய சூழலில், 2011-2025 கால கட்டத்தில் வளர்ச்சி யடைந்த நாடுகளின் வளர்ச்சிவிகிதம் ஆண் டுக்கு 2.3 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் ; ஆனால், வளர்முக நாடுகளின் வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும். இன்னும் குறிப்பாக, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனே சியா, தென்கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய 6 நாடுகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கும் என்றும், உலகின் மொத்த வளர்ச்சி யில் பாதி இந்த நாடுகளுடையதாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த பின்னணியில் உலகளாவிய பணக் கட்டமைப்பு முறையும் மாற்றத்திற்கு உள் ளாகும். உலக வர்த்தகத்தின் அடிப்படை அல காக இனியும் அமெரிக்க டாலர் மட்டுமே நீடிக்க முடியாது; யூரோ டாலரும், சீனாவின் யுவான் நாணயமும் முன்னுக்கு வந்துள்ளன.

எனவே, ஐஎம்எப் தலைமைப் பீடம் யாருக்கு என்பதில் போட்டி வலுத்துள்ளது. இது, இதுவரை நிகழ்ந்திராத வரலாறு.

No comments: