Friday, October 29, 2010

வரியும் இலவசமும்


தனியார் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் காண்டு அள்ளித்தரும் வரி மற்றும் இதர சலுகைகளை மறந்துவிட்டு, ஏழைகளுக்கான இலவச திட்டங் களால்தான் ஆபத்து என்று கூறுவது நியா யமற்றது என பொருளாதார நிபுணர் வெ.பா.ஆத்ரேயா கூறியுள்ளார்.

தமிழக அரசின் இலவசத் திட்டங்களும், உள், வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கான சலுகைகளும் குறித்து பொருளாதார நிபுணர் ஆத்ரேயா கூறி யுள்ளதாவது:-

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் “இலவச” திட் டங்களை அறிவித்து, மாநில நிதி நிலைமையை ஆபத்துக்குள்ளாக்கி வருவதாகவும் மக்களை “சார்புத்தன்மை” பண் பாட்டுக்கு இட்டுச் செல்வதாகவும் பேசப்பட்டு வருகிறது. உண்மை என்ன? எது இலவசம்?

எது “இலவசம்” என்பதில் தெளிவு வேண்டும். நம் நாட் டில் செல்வந்தர்களுக்கும் பெரும் வணிக/தொழில் தனியார் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து அள்ளி வழங்கப்படும் வரிச்சலுகைகளை எல்லாம் பொருளாதார வளர்ச்சிக்கு அவ சியமான “ஊக்குவிப்பு” நடவடிக்கைகள் என்று வரவேற்ப தும், மிகுந்த வறுமையில் வாழும் மக்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச நலத்திட்டங்களை “இலவசங்கள்” என்று வர் ணிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இது முற்றிலும் தவறு என்று நான் கருதுகிறேன். துணிவாங்கும்போதும் தீப்பெட்டி வாங்கும் போதும் சமையலுக்கு எரிபொருள் வாங்கும் போதும் அரசுக்கு வரி செலுத்தி வரும் சாமானிய மக்களுக்கு அரசு மருத்துவ அமைப்புகளில் கட்டணம் இன்றி அல்லது குறைந்தபட்ச கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப் படுவதை யோ, கல்விக்கட்டணக் குறைப்பையோ “இலவசம்” என்று ஏளனம் செய்வது ஏற்புடையதல்ல.


பொது விநியோக அமைப்பின் மூலமாக அரிசியும் வேறு சில இன்றியமையாத உணவுசார் பொருட்களும் குறைந்த விலையில் அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே போல் குழந்தைகளுக்கும் கருவுற்ற பாலூட்டும் தாய்மார் களுக்கும் சத்துக்குறைந்த இளம் பெண்களுக்கும் சத்துணவு வழங்கப்

படுவதும் பள்ளிகளில் மதிய உணவு தரப்படுவதும் புத்தகங்கள், சீருடைகள், சைக்கிள்கள், போக்குவரத்திற்கு கட்டணக்குறைவு ஆகியவை மாணவ-மாணவியருக்கு வழங்கப்படுவதும் வரவேற்கத்தக்க மனித வள முதலீடுகள். ஆனால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அரசு நினைத்தால் செல்வந்தர்கள் மீது கூடுதல் வரி சுமத்தி அதை ஏழைகளுக்கு செய்யலாம். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் கடன் முழுமையும் தவிர்க்க முடியும்.

முதலாளிகளை ஆதரிக்கும் அரசாங்கத்தின் கொள்கை கள் மத்திய-மாநில நிதி உறவு ஏற்பாடுகளும் மாநில அரசு களுக்கு வரவு-செலவு நெருக்கடிகளை ஏற்படுத்து கின்றன. தனியார் மூலதனங்களை ஈர்க்க நிலவும் போட்டி யில் பல மாநில அரசுகள். தனியார் கம்பெனிகளுக்கு பல வரி மற்றும் இதர அரசின் நிதி நிலைமைக்கு சிக்கல்கள் ஏற்படும் என்ற உண்மையை மறைத்து, மறந்துவிட்டு, ஏழை மக்க ளுக்கு என்று அறிவிக்கப்படும் திட்டங்களால்தான் ஆபத்து என்று கூறுவது முற்றிலும் நியாயமற்றது.

பெரும்பகுதி செலவுப்பொறுப்புகள் மாநில அரசுகள் மீது இருக்கையில், நாட்டில் மத்திய அரசின் கைக்கு வரும் மொத்த வரிப்பணத்தில் ஏன் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான தொகை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது? ‘தன்னாட்சி’ பேசும், அதை வலுவாக விளம்பரம் செய்யும் தமிழக அரசு இதை ஏன் தட்டிக் கேட்கவில்லை?

வெங்கடேஷ் ஆத்ரேயா

No comments: