Wednesday, October 20, 2010

பிரான்ஸ் போராட்டத் தீ பரவுகிறது ஓய்வூதியப் பறிப்புக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி


ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய வெட்டு ஆகியவற்றிற்கு எதிராக பிரான்ஸ் தொழிலாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதர வாக நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

ரயில்வே, பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தொழிலா ளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்திற்கு ஆதர வாக தபால்துறை, விமா னப்போக்குவரத்து, வாகன ஓட்டுநர்கள் ஆகியோரும் வேலைநிறுத்தம் செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் நான்காவது முறையாக பிரான்ஸ் தேசம் தழுவிய முழு வேலை நிறுத்தத்தைக் கண்டது.

தற்போது சர்கோசி தலைமையிலான அரசின் இந்த மக்கள் விரோத நட வடிக்கைகளைக் கண்டித்து மாணவர்களும் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். நாடு முழுவதுமுள்ள 400க் கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கவில்லை. இளைஞர் களும் ஓய்வூதியப் பறிப்புக்கு எதிராக முழக்கமிட்டவாறு பிரான்ஸ் நகர வீதிகளில் மாணவர்களோடு கை கோர்த்து வலம் வந்தனர்.

பெட்ரோலிய நிறுவ னங்களின் ஊழியர்கள் முழு வேலை நிறுத்தம் செய்து வருவதால் நாட்டிலுள்ள 12 ஆயிரத்து 500 பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் 2 ஆயிரத்து 500 நிலையங்கள் பெட்ரோல் இல்லாமல் தவிக்கின்றன. மக்கள் மத்தி யில் அரசுக்கு எதிரான கருத்து நிலவுவதால் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித் துள்ளன.

No comments: